சென்னை: ஆனந்தம், சண்டக்கோழி, ரன், பையா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாம்பாக்கத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கி உள்ளார். இது 50 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் ஒரு மையமாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், ஆகியவற்றின் உதவியுடன் பொதுமக்களின் நன்கொடையையும் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தாராளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த மையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….