நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடலூரில் 47 வாக்குச்சாவடிகளில் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துவர வாகனங்களும் தயார் நிலையில் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.