சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக சித்து விளையாட்டை தொடங்கியுள்ளது என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.