ஒடிசா: விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்குள் 2 ரயில் பாதைகள் முழுமையாக தயாராகிவிடும். இரவுக்குள் தயாராகும் இரு ரயில் பாதைகளிலும் மெதுவாக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல் அளித்துள்ளார். விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார்