பெங்களூரு: கர்நாடகா சிவமோகா நகரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது. தமிழ்த்தாய் பாடலை பாதியில் நிறுத்தி ஈஸ்வரப்பா கன்னட நாட்டு கீதத்தை பாட வைத்தார். சிவமோகா நகரில் தமிழர்கள் இடையே நடந்த வாக்கு சேகரிப்பு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.