சென்னை: அதிமுகவை சேர்ந்த மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அதிமுகவை சேர்ந்த மனோகரன் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுருந்தது.