மதுரை: சொத்துவரி உயர்வை தவறாக கணக்கிட்டு வசூலிப்பதாக தொடர்ந்த வழக்கில் அரசிடம் விளக்கம் பெற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த சுடலை என்பவரது வழக்கை உயர்நீதிமன்ற கிளை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.