டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டுபோய் சேர்த்துள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை என தெரிவித்தார். கோவாவில் நடந்த ஜி20 எரிசக்தித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.