கூடங்குளம், நவ.30: நெல்லை மாவட்ட மீனவர்கள் 8ஆயிரம் பேர் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.நெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தஸ்நேவிஸ் (50). மீனவரான இவர் கடந்த 27ம் தேதி பைபர் படகில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலுக்குள் மூழ்கினார். அவரை உடன் சென்றவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. நேற்று முன்தினம் அவரது உடல் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1400 நாட்டு படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தன. நேற்று நெல்லை மாவட்டம் கூத்தங்குழி, கூட்டப்புளி, இடிந்தகரை பெருமணல், உவரி உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 8ஆயிரம் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்றனர்.