ஜெய்ப்பூர்: இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது. கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஜெய்ப்பூரில் உள்ள ஓரிரு பாரம்பரிய இடங்களை பார்வையிடுகிறார்.