கோவை: ஓணம் பண்டிகை, வார இறுதி நாட்கள் மற்று சுப முகூர்த்தத்தை ஒட்டி, வரும் 26, 27, 29ம் தேதிகளில் கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 26, 27, 29ம் தேதிகளில், கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம் (26.08.2023 மற்றும் 27.08.2023) மற்றும் ஓணம் பண்டிகை (29.08.2023) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.