Friday, May 17, 2024
Home » நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு தயார் செய்த மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கை அரசிடம் விரைவில் தாக்கல்..!!

நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு தயார் செய்த மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கை அரசிடம் விரைவில் தாக்கல்..!!

by Kalaivani Saravanan

சென்னை: நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு தயார் செய்த மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 580 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு மாநில கல்விக் கொள்கையை தயார் செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கென்று பிரத்யேகமாக மாநிலத்திற்கென கல்வி கொள்கையை வரையறை செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய இந்த குழு கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு அளவில் கூட்டங்கள் நடத்தி வந்தது. குறிப்பாக கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சேவையில் ஈடுபடுபவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் நேரடியாகவும், இமெயில் வாயிலாகவும் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிக்கென்று தனித்துவமாக இருக்கக்கூடிய அளவில் இந்த கல்வி கொள்கை தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த பணிகள் கிட்டத்தப்பட்ட முடிவுபெற்று தற்போது வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, 4 பேர் கொண்ட குழு மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி கொள்கை வரையறை குழு தகவல் தெரிவித்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட பிரதான பரிந்துரைகள், 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. எந்த குழப்பமும் ஏற்படாமல், பரிந்துரைகளை சரியாக மொழிபெயர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில கல்விக் கொள்கை குழு தெரிவித்துள்ளது.

நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு தயார் செய்த மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை முதல்வரை சந்தித்து குழுவினர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வரைவு அறிக்கையை முதல்வரிடம் வழங்கியபின் அது பற்றி அரசு ஆராய்ந்து சட்டமாக இயற்றி நடைமுறைக்கு வரும். 2024-25 கல்வியாண்டில் புதிய மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi