சென்னை: ரூ.50,000-க்கு கீழ் வரி செலுத்தும் வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விதி எண் 110 இன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு வரலாற்றில் இத்தகையை சலுகை வழங்குவது இதுவே முதல்முறை. வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் 4 வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரி தள்ளுபடி செய்வதன் மூலம் 95,502 சிறு வணிகர்கள் பயன்பெறுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.