Thursday, May 23, 2024
Home » 50 கோடியை கடந்த உலக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை : இதுவரை 45,09 கோடி பேர் டிஸ்சார்ஜ்!!

50 கோடியை கடந்த உலக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை : இதுவரை 45,09 கோடி பேர் டிஸ்சார்ஜ்!!

by kannappan

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,09 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,08,38,107 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45,09,11,576 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,37,17,358பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,09,173 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா  –  பாதிப்பு- 82,133,342இந்தியா   –      பாதிப்பு – 43,037,388பிரேசில்   –      பாதிப்பு – 30,183,929      பிரான்ஸ்       – பாதிப்பு – 27,163,629ஜெர்மனி      – பாதிப்பு – 22,936,514     …

You may also like

Leave a Comment

18 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi