பெரம்பூர்: பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்த பழனிச்சாமியின் 6 வயது மகன், பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். இந்நிலையில், காலை 11 மணிக்கு பள்ளி ஆசிரியர், சிறுவனின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பள்ளிக்கு வரும்படி கூறியுள்ளார். அதன்படி, சிறுவனின் தாயார் பள்ளிக்குச் சென்றபோது, சிறுவன் மூச்சுத்திணறலால் அவதிப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. உடனே, சிறுவனை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர், இதுபற்றி சிறுவனிடம் விசாரித்தபோது, ஏபிசிடி சரியாக எழுதவில்லை என்று பள்ளி ஆசிரியர் சரமாரியாக அடித்ததாக கூறியுள்ளான். இதுதொடர்பாக, சிறுவனின் தாயார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….