தண்டையார்பேட்டை: ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் காரில் கஞ்சா விற்பனை செய்வதாக ராயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், அந்த காரில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த 4 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கண்ணகி நகரை சேர்ந்த பெயின்டர் முத்துவேல் (30), கார்பெண்டர் வினோத் (25), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (26), தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யா (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 40 கிலோ கஞ்சா ஒரு கார், பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் . மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காரில் கடத்தி விற்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
previous post