மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் நரேஷ் கோயலுக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நரேஷ் கோயல் ஜாமின் பெற்றுள்ளார்.