திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் 23 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் ரூ.109.99 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே மாதத்தில் ஏழுமலையானை 23.38 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 11 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.109.99 கோடி காணிக்கையாக அளித்தனர். மேலும், 1.6 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.