கும்பகோணம்: கடந்த 2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோவில் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.