திருவள்ளூர்: வடசென்னை, வல்லூர் அனல் மின்நிலையங்களில் 1,100 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. வல்லூர் அனல் மின்நிலையத்தில் டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.