* மக்காச்சோளத்திற்கு 30ம் தேதி கடைசி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் இருபாலருக்கும் கலெக்டர் அழைப்பு
கரூர்: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க அக்டோபர் 6ம் தேதி வரை பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டத்தின் மூலம் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் அக்டோபர் 7ம்தேதி, காலை 7மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடியும் வரை நடத்தப்படவுள்ளது.
17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8 கிமீ (ஆண்கள்), 5 கிமீ (பெண்கள்). 25வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிமீ (ஆண்கள்), 5 கிமீ (பெண்கள்) என்ற அடிப்படையில் ஓட்டப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெறுபவர்களுக்கு ரூ. 1000ம் வீதம் என 28 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அக்டோபர் 6ம்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் வயது சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல்கள் போட்டி நடைபெறும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.