Thursday, May 9, 2024
Home » 108 ஆம்புலன்சில் குவா குவா பெண் குழந்தை பிறந்தது ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை மலை பகுதியில்

108 ஆம்புலன்சில் குவா குவா பெண் குழந்தை பிறந்தது ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை மலை பகுதியில்

by Karthik Yash

ஒடுகத்தூர், டிச.13: ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை மலை பகுதியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுராணி மலை கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(40). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(35), நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து சாந்தியை ஆம்புலன்ஸ்சில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். ஆம்புலன்சை சரவணன் ஓட்டி சென்றார். மருத்துவ உதவியாளர் செல்வி உடனிருந்தார். அப்போது வழியில் சாந்திக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சை நடுவழியில் நிற்க வைத்து செல்வி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, சாந்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi