ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கோமராக்களின் வாயிலாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விதியை மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.