தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு 750க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதமாக சம்பளம் வழங்காமல் ஒன்றிய அரசு பாக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.