Wednesday, May 8, 2024
Home » 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

by Ranjith

 

நீடாமங்கலம், மார்ச் 22: தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வேற்பாளர்களை அறிமுகம் படுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாகன சோதனைகள் செய்து வரும் நிலையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக நீடாமங்கலம் பகுதியில் வாக்காளர்கள் 100 சதம் வாக்களிக்க வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும் நீடாமங்கலம் நகரில் முக்கிய வீதிகளில் தாசில்தார் தேவேந்திரன் தலைமையில் தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு தங்களது வாக்குப்பதிவை உறுதி செய்தனர்.

You may also like

Leave a Comment

thirteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi