கமுதி, ஏப்.16: கமுதியில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கமுதி மீனாட்சியம்மன் கோவில் திடலில் இருந்து கமுதி பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, கோட்டைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், வட்டார இயக்க மேலாளர்கள் மயில்ராஜ், செந்தில்வேல் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திரவியம், மாரிமுத்து, தமிழரசி, கேசவன், சாந்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் நூறு சதவீத வாக்களிப்பை முன்னிறுத்தி கோஷங்கள் போடப்பட்டது.