ஓசூர், ஏப்.7: ஓசூர் பேடரப்பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 915 மாணவ -மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் கடைசி வேலை நாட்களில், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில்(2023-2024) 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று(6ம் தேதி) கடைசி பள்ளி வேலை நாளாக அரசு அறிவித்தனர். இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், 189 நாட்கள் வருகை தந்த 2ம் வகுப்பு மாணவர்கள் லிஸ்வந்த், சாதியா, 3ம் வகுப்பு மாணவர்கள் மனோபாலா, தருண் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்.நாகேஷ் செய்திருந்தார். விழாவில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.