மல்லசமுத்திரம், ஏப்.13: திருச்செங்கோடு வேளாண்மை உற் பத் தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 110 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். முதல் தர கொப்பரை கிலோ ₹76.85 முதல் ₹92.85 வரையிலும், 2ம் தர கொப்பரை கிலோ ₹65.60 முதல் ₹73.40 வரையும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 110 மூட்டை கொப்பரை, ₹4.50 லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 20ம்தேதி நடைபெறும் என கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
₹4.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
previous post