சூளகிரி, டிச.25: சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் ஊராட்சியில், ₹1.58 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார். சூளகிரி தாலுகா, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உள்பட்ட அத்திமுகம் ஊராட்சியில், ₹1.58 கோடி மதிப்பீட்டில், தார்சாலை, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பூமி பூஜை செய்து நேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் நாகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாபி பிரான்சினா, உதவி பொறியாளர் சவுந்தராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஊர்கவுண்டர் பாஸ்கர், வார்டு ரேஷ், ஹாஜி கலீல், ஆனந்த், நாகா, சமியுல்லா, ராமப்பா, ஆனந்த், சுரேஷ், வினோத், சலாவுத்தின், பயாஸ், ஏஜஸ், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
₹1.58 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
previous post