ஊத்தங்கரை, டிச.25: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 1997ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ,மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியர் ஞானபண்டிதன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை விழாவை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத், ஆசிரியர்கள் சத்தியநாதன், கேசவகுமார், சந்திரசேகர், வெங்கடாசலம், வெங்கடேசன், குப்பம்மாள் தர்மன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டு பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.