வேதாரண்யம்,அக்.20: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது மண் எனது தேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி தலைமை வகித்தார். பேராசிரியர் ராஜா வரவேற்றார். நேரு யுகேந்திரா நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன், வேதாரண்யம் ஒருங்கிணைப்பாளர் சுப கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மாரிமுத்து, கல்லூரி பேராசிரியர்கள் பிரபாகரன் இளையராஜா பிரமநாதன், கார்த்திகா, விஜயலட்சுமி, மாதவன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டெல்லியில் அமைக்கப்பட உள்ள அமிர்தா தோட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து 60 லட்சம் கிராமங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற வேதாரண்யத்தில் இருந்து ஐந்து மண் கலயங்களில் புனித மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.