வேதாரண்யம்,ஜூன்17: வேதாரண்யம் தாலுகா அண்டர்காடு சுந்தர விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் உலக காற்று தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் காற்று உருவாகும் சூழல் அவற்றின் பயன்பாடு காற்று மாசுபடுவதை தவிர்த்தல் தொடர்பான கருத்துக்களை மாணவர்களுக்கு ஆசிரியர் வசந்தா எடுத்துக் கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து காற்றை தூய்மைப்படுத்துவோம் தூய காற்றே சுவாசிப்போம், காற்றை மாசுப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான மாவை மாணவியர்கள் கலந்து கொண்டனர்.