பெரம்பலூர்,ஜூன்.17: பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பாக மது பழக்கம் உள் ளவர்களுக்கு விழிப்புண ர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் கற்பகம் உத்தரவின் படி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா அறிவுறுத்தலின் பேரில் பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது அருந்தும் நபர்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிக ழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி பெரம்ப லூர் நகராட்சியின் சுகா தார ஆய்வாளர் மோகன் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண் டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே மது பாட்டில்கள் வாங்க வந்த மது அருந்துவோரி டம் குடிப்பழக்கத்தால் ஏற் படும் தீமைகள், குடிப்பழக்க த்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்த விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பாக மது பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
previous post