வேதாரண்யம், மே 27: வேதாரண்யம் நகர், மாரியம்மன்கோவில் துவக்கத்தில் அமைந்துள்ளது. அச்சம் தீர்த்த விநாயகர் கோயில். இந்த விநாயகருக்கு உலக நன்மை வேண்டி திரவிய பொடி , மஞ்சள் பொடி, தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களாலும், பழச்சாறுகளாலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்பு 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
வேதாரண்யத்தில் அச்சம் தீர்த்த விநாயகருக்கு சந்தனகாப்பு
previous post