நாகப்பட்டினம், மே 27: நாகப்பட்டினம் புதிய எஸ்பியாக ஹர்ஷ்சிங் பொறுப்பு ஏற்று கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றிய ஜவஹர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றிய ஹர்ஷ்சிங் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று எஸ்பியாக பதவி ஏற்று கொண்டார். 2018ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவில் சேர்ந்த ஹர்ஷ்சிங், திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி எஸ்பியாகவும் தொடர்ந்து சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.