வேடசந்தூர், ஏப். 7: வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). தனியார் உணவு விடுதி பணியாளர். இவர் கடந்த ஏப்.4ம் தேதி இரவு வெப்பம் தாங்க முடியாமல் தனது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது அவர் அருகில் வைத்திருந்த ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.