காரைக்குடி, டிச.21: காரைக்குடி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக லேசான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து விடாமல் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி ரோட்டில் உள்ள தனியார் வீட்டில் வசித்து வரும் நகராட்சி பணியாளர் உமா வீட்டின் மேற் பகுதி சிமென்ட் பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் உமா, இவரது கணவர் வேலு, மகள் முத்துலட்சுமி காயமடைந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் மேற்பகுதி விழுந்து மூன்று பேர் காயம்
previous post