Tuesday, May 28, 2024
Home » வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

by Ranjith

மதுரை, ஜூன் 10: மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் , வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கோமதிபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி மலர்கொடி(57). இவர்கள் கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது, வீட்டின் முன் பக்கம் இருக்கும் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.மேலும் அதிலிருந்த 14 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மலர்கொடி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi