Sunday, May 19, 2024
Home » விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

by Dhanush Kumar

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (37). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் மழவராய நல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த முனியப்பனிடம் அவரது மனைவி தமிழரசி சம்பள பணம் குறித்து கேட்டுள்ளார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .பின்பு தமிழரசியை திட்டி தாக்கி விட்டு விக்கிரமங்கலம் வந்த முனியப்பன் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை ( விஷம்) குடித்துவிட்டதாகவும், பின்பு முனியப்பனை அவரது நண்பர் வல்லரசு உதவி மூலம் விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இருப்பது தெரிய வந்தது அங்கு சென்ற அவரது மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் முனியப்பனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த முனியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் முனியப்பனின் மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi