புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி, மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் சபாநாயகரிடம் நேற்று நோட்டீஸ் கொடுத்தார். மக்களவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அரசு தயாராக இல்லை. இந்நிலையில், மக்களவையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி திமுக எம்பி தயாநிதி மாறன், மக்களவை சபாநாயகரிடம் நேற்று நோட்டீஸ் கொடுத்தார். அதில், ‘நாடு முழுவதும் பற்றி எரியும் தீவிர பிரச்னையான எரிபொருள் வரி உயர்வு குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளபடி, இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. …