Saturday, May 18, 2024
Home » விவாகரத்து பெற்ற அம்மாவை ‘டேட்டிங்’ தளத்தில் சேர்த்த மகள்: பிரபல நடிகை ஓபன்டாக்

விவாகரத்து பெற்ற அம்மாவை ‘டேட்டிங்’ தளத்தில் சேர்த்த மகள்: பிரபல நடிகை ஓபன்டாக்

by kannappan

மும்பை: கணவரிடம் இருந்து விவாகரத்து ஆனநிலையில், என்னை டேட்டிங் தளத்தில் எனது மகள் சேர்த்துவிட்டார் என்று பிரபல நடிகை சுசித்ரா தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, தனது கணவர் சேகர் கபூரிடமிருந்து விவாகரத்து செய்த பின்னர், தனது வாழ்க்கை முறை குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘எனக்கு விவாகரத்து ஆனதால், என்னுடைய அனுமதியின் பேரில் என்னை டேட்டிங் (குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்யும் முறை; திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம்) தளத்தில் என் மகள் சேர்த்துவிட்டார். என் பெயரைப் பதிவுசெய்து என் சுயவிவரத்தை அந்த டேட்டிங் தளத்தில் இணைத்தார். என்னிடம் சில தேதிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். தொடர்ந்து என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. சலிப்பாக இருந்தது. உனக்காக தானே டேட்டிங் தளத்தில் உன்னை சேர்த்துவிட்டேன். இப்போது ஏன் மறுக்கின்றீர்கள்! என்று கேள்வி எழுப்பினார். அற்பதனமான ‘அதை’ ெசய்ய எனக்கு ஆர்வமில்லை. ஒற்றை பெற்றோராக என் மகளுடன் சந்தோசமாக இருக்கிறேன். இப்போது என்னால் டேட்டிங் தளத்தில் சேரமுடியாது என்று மகளிடம் கூறிவிட்டேன்’ என்றார். முன்னதாக திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூரை மணந்த சுசித்ரா கிருஷ்ணமூர்த்திக்கு, காவேரி கபூர் என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

twenty + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi