தேனி, ஆக. 3: தேனி அருகே, பழனிசெட்டிபட்டியில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓடைமேடு பகுதியில் ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாகவும், இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர்கள் ரமேஷூக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பழனிசெட்டிபட்டியில் உள்ள வீட்டுக்கு ரமேஷ் வந்தபோது, வீட்டின் ஒரு அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒன்பதேகால் பவுன் தங்க நகைகள், சுமார் 700 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் ரமேஷ் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி வீட்டில் 9 பவுன், வெள்ளி பொருட்கள் கொள்ளை
previous post