விருத்தாசலம், ஆக. 9: வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர், அவரது 2 மனைவிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் அடுத்த ஓட்டிமேடு கிராமம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரம்(37). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவிகள் சுந்தரி, அனுசியா ஆகியோர் சுந்தரத்தை அசிங்கமாக திட்டி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சுந்தரம் அளித்த புகாரின்பேரில், வேல்முருகன், சுந்தரி, அனுசியா ஆகியோர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
previous post