விருத்தாசலம், ஆக. 9: விருத்தாசலம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சரஸ்வதி(40). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆலடி அடுத்த கட்டியநல்லூர் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சரஸ்வதியின் தந்தை மணி அளித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
previous post