காரியாபட்டி, பிப்.17:விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்கள், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ என்ற மாபெரும் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் இன்று விருதுநகர் அல்லம்பட்டி விலக்கு நகராட்சி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறார். எனவே விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பாக முகவர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.