கடலூர்: பாக்கிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள இந்திய விமான படை மூலம் வெற்றி விழா சைக்கிள் பேரணி கடந்த 15ம் தேதி மகாமல்லபுரத்தில் துவங்கியது. விங்க் கமாண்டர் நிதின்உபாத்யா தலைமையில் கடலூர் வந்த 17 பேர் கொண்ட படை வீரர்களுக்கு கடலூர் நகர அரங்கு முன் முன்னாள் படைவீரர் மிலிட்டரி பாபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ பெருமாள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னாள் ராணுவ வீரர்கள் மதியழகன், முத்துசாமி மற்றும் வேலு, வெங்கடேசன், மணி, இந்திரஜித், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி தஞ்சாவூர் நோக்கி சென்றது….