Thursday, May 16, 2024
Home » விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு காவலர்கள் ரூ.20.74 லட்சம் நிதி உதவி: எஸ்பி வழங்கினார்

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு காவலர்கள் ரூ.20.74 லட்சம் நிதி உதவி: எஸ்பி வழங்கினார்

by Ranjith

 

காஞ்சிபுரம்: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும் உறவுகள் குழு காவலர்கள் சார்பாக ரூ.20.74 லட்சம் நிதி உதவி வழங்கினர்.  ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த வீராணம் பகுதியை சேர்ந்தவர் காவலர் இளங்கோ (26). இவர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆயுதப்படை பணிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பனப்பாக்கம் பானாவரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஏரிக்கரை அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் அவரது பைக் இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், காவலர் இளங்கோ குடும்பத்திற்கு அவருடன் பணிபுரிந்த 2017 ஆண்டு பேட்ச் சேர்ந்த காக்கும் உறவுகள் குழு காவலர்கள் சார்பாக நிதி திரட்டப்பட்டது. இதில், ரூ.20 லட்சத்து 74 ஆயிரத்து 50 நிதியை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் முன்னிலையில் போலீசார், கமல்ராஜ், விக்னேஷ், தமிழ் குமரன் மற்றும் செல்வகுமார் சேர்ந்து இளங்கோவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

13 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi