Saturday, May 11, 2024
Home » விநாயகப்பெருமான் : பிட்ஸ்

விநாயகப்பெருமான் : பிட்ஸ்

by kannappan
Published: Last Updated on

*திருவண்ணாமலையில் உள்ள விநாயகப் பெருமானுக்கு யானை நிறை கொண்ட விநாயகர் என்று பெயர்.*அம்பாசமுத்திரம் காக்யநல்லூரில் முத்தாண்டிப்புலவர் பாடிய பாடலுக்கு ஏற்ப வயிறு வெடித்ததால் வயிறு வெடித்த பிள்ளையார் எனும் பெயரில் விநாயகர் அருள்கிறார்.*திருவாவடுதுறையில் திருமாளிகைத் தேவருக்காக கொட்டு சத்தத்தை தவிர்த்த விநாயகர் கொட்டு சத்தம் தவிர்த்த விநாயகர் என்று வணங்கப்படுகிறார்.*சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருத்தலக் கோயிலில் உள்ள விநாயகர் தோகையடி விநாயகராக அருள்கிறார்.*மயிலாடுதுறைக்கு அருகில் தண்டந்தோட்டம் எனும் இடத்தில் உள்ள விநாயகரை மணிக்கட்டி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.*மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கையில் எழுதுகோலுடன் காட்சி அளிக்கும் விநாயகருக்கு சாட்சி விநாயகர் என்று பெயர்.*கணபதி குண்டம் என்னும் இடத்தில் கணபதி உருவம் பாணலிங்கம் போல் விளங்குவதால் பாலலிங்க கணபதி என்று அழைக்கின்றனர்.*மருதங்குடியில் உள்ள பிள்ளையாருக்கு நீளமாக நாக்கு உள்ளதால் நீளநாக்கு பிள்ளையார் என்று பெயர்.*திருநாட்டியத்தான்குடியில் விரலை நீட்டிய நிலையில் உள்ளதால் கை காட்டி விநாயகர் என்று பெயர்.*திருச்சி, திருபேரன்பில் திருத்தலத்தில் செவி சாய்த்துக் கேட்குமாறு விநாயகர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறார். – டி.பூபதிராவ்…

You may also like

Leave a Comment

seventeen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi