Thursday, May 16, 2024
Home » விக்கிரவாண்டியில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலையில் கணவன் கைது

விக்கிரவாண்டியில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலையில் கணவன் கைது

by Karthik Yash

விக்கிரவாண்டி, மார்ச் 5: விக்கிரவாண்டி அருகே கணவன்-மனைவி தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் (32). இவர் மர இழைப்பகம் கடை வைத்து நடத்தி வருகிறார். சென்னை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெண்ணரசி (29). இவர்களுக்கு 7 வயதில் கிருத்திகா என்ற மகளும், 4 வயதில் மோனிஷ் என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெண்ணரசி அவ்வப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்ணரசி தனது குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது கணவர் கோபிநாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவர்கள் 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெண்ணரசியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணரசியின் கணவர் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

18 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi