சிவகாசி, ஜூலை 28: சிவகாசி தேவர் குளத்தை சேர்ந்தவர் திருப்பதி (53). இவர் அருப்புக்கோட்டை அருகே மதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தங்கமுத்துவிற்கும் முன்பகை இருந்தது. இந்நிலையில், திருப்பதி தேவர்குளம் காளியம்மன் கோயில் அருகே நடைபயிற்சி மேற்கண்ட போது அங்கு வந்த தங்கமுத்து தகாத வார்த்தை பேசி கம்பியால் அடித்தார். அதேபோல் திருப்பதி, தங்கமுத்துவை தகாத வார்த்தை பேசி கம்பியால் அடித்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.